எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் TTV தினகரனின் கூடாரம் சரிய தொடங்கியது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திமுகவுக்கும் ,அதிமுகவிற்க்கும் சென்றனர். அமமுக தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்த்தார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் அமமுக_த்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுகவுக்கு வைத்துக்கொண்டிருக்கும் உண்மையான தொண்டர்கள் திமுகவுக்கு வரவேண்டும் என உன் உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயம் இல்லை என்று அழைப்பு விடுத்தார். இது குறித்த கேள்விக்கு இன்று சேலம் ஓமனுரில் பதிலளித்த முதல்வர் , எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என்று கூறினார்.