Categories
மாநில செய்திகள்

“இ- பாஸ் இனி வேண்டாம்”… தீடீர் உத்தரவு போட்ட மத்திய அரசு…!!

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி போடப்பட்ட முழு ஊரடங்கை, மே மாதம் 31ஆம் தேதி மத்திய அரசு திரும்ப வாங்கியுள்ளது. அதன் பிறகு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி வருகின்றன. மாநிலங்களுக்கு சென்றுவர மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி இன்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ள அறிக்கையில், “புதுச்சேரியிலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களிலிருந்து உள்ளே வருவதற்கும் இனி இ-பாஸ் தேவையில்லை” என அறிவித்துள்ளது. இதனால் புதுவையில் இன்றிலிருந்து மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |