தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வருமானம் இழந்த இனிப்புக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோம்பை துரைசாமிபுரத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ரஞ்சிதம் மற்றும் இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில் இனிப்புக்கடை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் கடைகளை திறக்க முடியாமலும், போதிய வருமானம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் தமிழ்செல்வனுக்கு சில மாதங்களாக வருமானம் இல்லாமல் இழப்பு ஏற்பட்ட நிலையில் பெரும் மனா உளைச்சலில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விரக்தியடைந்த தமிழ்ச்செல்வன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குதித்துள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.