Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாருக்கும் கொரோனா சோதனை கிடையாது – தமிழக அரசு அதிர்ச்சி தகவல் …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்தித்து  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார். ஆளுநர், முதல்வர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சண்முகம் கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

ஒரே நாளில் 3 பேர் பலி; இந்தியாவில் ...

இதில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் ஒத்துழைக்காவிட்டால், வீட்டில் இருந்து வெளியேற்றி அரசின் முகாமில் அடைக்கப்படுவர். கொரோனா அறிகுறி தென்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும். தென் கொரியா போன்று அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படவில்லை என்று தலைமை செயலர் தெரிவித்தார்.

Categories

Tech |