10ம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை மக்களின் எண்ணம் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதற்கே தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், மக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று தகவல் அளித்த அவர்,
மக்கள் முக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வரவேண்டும். சட்டத்தை வைத்து மிரட்ட முடியாது. ஊரடங்கை மீறியதாக வாகன பறிமுதல், அபராதம் என கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என விளக்கம் அளித்துள்ளார். நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை வேண்டும்,
நம்மால் மற்றவர்களும் பாதிக்க கூடாது என்ற எண்ணம் வேண்டும். தும்மல், இருமல், காய்ச்சல், உடல்வலி ஆகியவை கொரோனாவின் அறிகுறிகள் என தெரிவித்துள்ளார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் சென்னையில் கட்டுப்பட்டு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது களத்தில் 11 ஆயிரம் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.