நிலைவாசல் தலையில் விழுந்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். இவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிலைவாசலை வீட்டின் சுவரில் சாய்த்து வைத்திருந்தை சிறுமி பிடித்து விளையாடிய போது திடீரென அவரின் மீது சாய்ந்து விழுந்ததுள்ளது.
இதில் ப்ரீத்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.