தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான அன்புச் செழியன் பிரின்ஸ் படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, விஜய் மற்றும் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவர் சிவகார்த்திகேயன் தான். இவருடைய படத்தை தீபாவளி பண்டிகையின் போது வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். மேலும் இந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பது சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார்.