Categories
உலக செய்திகள்

“சபாஷ்! சரியான போட்டி”… போராட்டக்காரர்களை கலைக்க நூதன முயற்சி…. என்ன நடந்தது…?

நியூசிலாந்தில் போராட்டக்காரர்களை கலைக்க பயங்கர சத்தத்துடன்  பாடல்கள் ஒலிக்கச் செய்த நிலையில், அதற்கு நடனமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

நியூஸிலாந்தில் தடுப்பூசியை எதிர்க்கும் சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலைகளுக்கு இடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கூடாரங்கள் அமைத்து சுமார் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலத்த மழையிலும் விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள்.

எனவே, காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அதிகமான சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால், சற்றும் பின் வாங்காத போராட்டக்காரர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடி கொண்டாடினர்.

Categories

Tech |