Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… குடிக்கு அடிமை… கண்டித்த தாய்… புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு….!

மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனியார் பஸ் டிரைவராக மேட்டுப்பாளையம் பகுதியில் வேலை செய்து வந்தார். ரகுராம் தான் காதலித்த நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் ரகுராமிற்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்தது அவரது வீட்டிற்கும் நர்மதாவிற்கும் தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருமுறை குடித்து விட்டு வந்த ரகுராமை அவரது தாயார் கண்டித்துள்ளார்.

தனது தாய் கண்டித்ததால் அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து விடுவேன் எனக் கூறி குடும்பத்தாரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் யாரும் எதிர்பாராத வகையில் ரகுராம் கிணற்றுக்குள் குதித்தார். உடனே இச்சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படை வீரர்களிடம் தெரிவித்தனர். இத்தகவலை அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ரகுராமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு முன்னரே அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |