நெய் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
½ கப் பாசி பருப்பு, ½ கப் சர்க்கரை, 2 தேக்கரண்டி நெய், 2 ஏலக்காய், 6 முந்திரி பருப்பு
செய்முறை:
பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வறுக்க வேண்டும். நன்றாக வருக்கவில்லை என்றால் சுவை நன்றாக இருக்காது. கை விடாமல் தொடர்ந்து கரண்டி கொண்டு வறுக்க வேண்டும்.
ஆறவைத்து நன்றாக பொடி செய்யவும். அரைக்கும் போது மிக்சியின் பக்கங்களில் மாவு சேராதவாறு துடைத்து விட வேண்டும்.
அதே போல் சர்க்கரையையும் பொடி செய்து ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதனையடுத்து நெய்யை உருக்கி முந்திரியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வறுக்க வேண்டும்.
அதன்பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொருட்களை போட்டு உருகிய நெய்யை ஊற்றி, அதில் முந்திரி சேர்த்து உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இப்போது சுவையான நெய் உருண்டை தயார்.