தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு neet.nat.nic.in என்ற இணையதளம் மூலம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் செயல்முறை தொடங்கியது. மேலும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் உரிய கட்டங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு வரும் ஆறாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது. தற்போது தேசிய தேர்வு முகமை விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 15ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதுவரை நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.