Categories
கல்வி மாநில செய்திகள்

“நியூபாக்ஸ்” NEET தேர்வு எழுத….. அனைவருக்கும் இலவச ஆன்லைன் வகுப்பு…!!

நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும்,

ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு ஆன்லைனில் இலவசமாக பயிற்சி அளிக்கும் விதமாக தமிழக கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைனில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |