Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற இடத்தில்…. பெண் மற்றும் சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறுமி மற்றும் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உமா, காவியா மற்றும் வீட்டின் அருகில் வசிக்கும் 5 க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது உமா மற்றும் காவ்யா இருவரும் பாறைகுழியில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இதனையடுத்து திடீரென இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் பெருமாநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் இறங்கி தேடினர். அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து இறந்த நிலையில் உமா, காவியா ஆகியோரின் உடல்களை மீட்டனர். இதனைதொடர்ந்து 2 பேரின் உடல்களையும் காவல்துறையினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெருமாநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |