Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டன் அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதிக் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டனை நியமிக்க முடிவு செய்துள்ளார். இவருடைய முடிவுக்கு செனட் சபையின் ஒப்புதல் மிகவும் அவசியமாகும்.

ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக நீரா தாண்டனை நியமிப்பதற்கு செனட் சபை எம்.பி ஜோ மேன்ச்சின் தன்னுடைய எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இதனால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் வெள்ளை மாளிகையின் நிர்வாக குழுவில் நீரா தாண்டன் இடம் பெறுவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது “அதிபரின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன்  நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மேலும் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் தான் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |