2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசால் நிராகரிக்கப் பட்டது. அந்த தகவலை தமிழக அரசு வெளியிடாமல் இருந்ததாக சர்ச்சை உருவாகி இருந்த நிலையில் தற்போது 2020_ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வின் தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.அதில் நீட் தேர்வுக்கன பதிவை டிசம்பர் 2 முதல் 31 வரை பதிவு செய்து கொள்ளலாம்.தேர்வின் அனுமதி சீட்டை மார்ச் 27ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த அறிவிப்பில் மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்.தேர்வின் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான தேதி எட்டு மாதங்களுக்கு முன்பு கொட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தயாராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீட்டும் எதிர்ப்பு தற்போதும் இருந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.