Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்முறையாக மாதவனுடன் ஜோடி சேரும் நயன்தாரா?…. இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபல தயாரிப்பாளர்….. ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும் கிளம்பியது. அதன்பின் தமிழக அரசு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்ட பிறகு நயன்தாராவின் வாடகை தாய் பிரச்சனையும் ஓரளவு அடங்கியது.

அதன் பிறகு நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் குழந்தை பிறந்ததற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா ஒத்துக் கொள்ள மாட்டார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் நயன்தாரா புது படங்களில் ஒப்பந்தமாகி கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் முதன் முறையாக தற்போது நடிகர் மாதவனுடன் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அதோடு தயாரிப்பாளராக வலம் வந்த சசிகாந்த் நயன்-மாதவன் நடிக்கும் புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தயாரிப்பாளர் இயக்குனர் அவதாரமாக எடுத்து முதன் முறையாக நயன்தாரா மற்றும் மாதவனை வைத்து படத்தை இயக்குவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |