Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாயம்” 80 கிலோ வெங்காயம்….. விரைவில் விற்பனை….. விவசாயிகளாக மாறி வரும் திருச்சி கைதிகள்….!!

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயிரிடப்பட்ட சுமார் 80 கிலோ வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வளாகத்தில் உள்ள அங்காடி மூலமாக விற்கப்பட்டு வருகின்றன. சிறைக்குள் பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் கைதிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அவ்வாறு சிறையில் பயரிடப்பட்ட கரும்புகள் பொங்கல் திருவிழாவை ஒட்டி விற்பனைக்கு வந்தன.

இந்த நிலையில் இயற்கை முறையில் சின்ன வெங்காயத்தை கைதிகள் பயரிட்டு தற்போது அறுவடை செய்து உள்ளனர். இவ்வாறு கைதிகளால் விளைவிக்கப்பட்ட சுமார் 80 கிலோ வெங்காயம் விரைவில் சிறை அங்காடி மூலமாக விற்பனைக்கு வர உள்ளது. 80 சதவிகித இயற்கை முறையில் சின்ன வெங்காயம் விலைவிக்கப்பட்டுள்ளதாக கூறிய  சிறை கண்காணிப்பாளர் எதிர்காலத்தில் 100 சதவிகித இயற்கை முறையில் விளைவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |