“பிரின்ஸ்” திரைப்படத்திற்கு நடிகர் சத்யராஜ் வேண்டாம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாக இருக்கின்றது. முதன் முறையாக சிவகார்த்திகேயனின் நேரடி தெலுங்கு படமாக உருவாகியுள்ளது. இருப்பினும் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் ஏற்ற வகையில் தான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.
ஏற்கனவே “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தில் இவர்கள் கூட்டணி வரவேற்பை பெற்றது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் கதாபாத்திரம் பற்றி சிவகார்த்திகேயனிடம் இயக்குனர் அனுதீப் கூறியதாவது, “அதற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ஆனால் பாகுபாலியில் கட்டப்பா போன்ற கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் இந்த கதாபாத்திரத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என அனுதீப் சிவகார்த்திகேயனிடம் மறுப்பு தெரிவித்தாராம். ஆனால் நீங்கள் கட்டப்பா சத்யராஜை மட்டும்தான் பார்த்துள்ளீர்கள்.
இங்கே தமிழில் நடிகன், பங்காளி, அமைதிப்படை என கலக்கிய சத்யராஜை நீங்கள் பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறி அவரை சமாதானம் செய்து சத்யராஜை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்து வந்தாராம்” என்று கூறியுள்ளார். இந்த தகவலை “பிரின்ஸ்” திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் நடிகர் சத்யராஜ் கூறியதாவது, “அவர் அப்படி தன்னை வேண்டாம் என இயக்குனர் அனுதீப் சொன்னதாக கூறியபோது, கீழே அமர்ந்திருந்த அனுதீப் அவசரமாக கைகளை ஆட்டி தான் அப்படி சொல்லவில்லை என மறுத்தது பார்ப்பதற்கு வேடிக்கையாகயுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.