செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள் அதில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று, செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கிறதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில், அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
ஆய்வாளர்கள், அப்பள்ளத்தாக்கில் நீர்நிலைகள் இருந்திருப்பதற்கான ஆதாரம் இருக்க வாய்ப்புள்ளது என்று கருதினார்கள். எனவே, அந்த பள்ளத்தாக்கிற்கு விண்கலம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது நாசா, பெர்சவரன்ஸ் விண்கலத்தினுடைய ரோவர் கருவியால் செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.
From space, the Mars Reconnaissance Orbiter and other spacecraft gave us tantalizing hints about Jezero Crater's watery past. Now that the @NASAPersevere rover is providing close-ups from the ground, scientists have encountered some geological surprises: https://t.co/9tXmiFNsDS pic.twitter.com/ern4PqRkV6
— NASA Mars (@NASAMars) October 7, 2021