தஞ்சாவூரை சேர்ந்த மாணவன் தயாரித்த செயற்கை கோள் ஜூன் 2021ல் நாசா ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸூதீன் என்பவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்த செயற்கைக்கோள் நாசா விண்வெளி தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரியாசுதீன் செய்தியாளர்களை சந்தித்தபோது நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேனிங் அமைப்பு இணைந்து நடத்திய கியூ இன் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளில் 73 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நானும் பங்கேற்றேன்.
நான் உருவாக்கிய விஷன் ஒன்று, இரண்டு என்று 2 செயற்கைக்கோள்கள் தேர்வாகி உள்ளதாக நாசா அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 செயற்கைக்கோள் 37 மில்லி மீட்டர் உயரம் 33 கிராம் எடையும் கொண்டவை. இவை எடையில் சிறியது. இந்த டெக்னாலஜி எக்பெரிமெண்டல் செயற்கைக்கோள். செயற்கைக்கோள் விஷன்- 1 பாலி எதரி இமைடு அல்டம் 9085,விஷன்- 2 பாலி எதரி இமைடு அல்டம் 1010 என்று சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக் மூலம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைகொண்டு வடிவமைக்கப்பட்டுள் ளன.
இதற்கு தேவையான மின்சக்தியை செயற்கைக்கோளின் மேற்புறத்தில் உள்ள சோலார் செல்களில் இருந்து பெறமுடியும். 11 சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதால் விண்வெளியில் உள்ள தட்பவெப்ப நிலையில் இது குறித்த தகவலையும் ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மையும் இது மூலம் தெரிந்து கொள்ளலாம். 2021 ஜூனில் நாசா விண்வெளி தளத்தில் இந்த விஷன்1 ஆர்எஸ் 7 ராக்கெட் ஏவப்படும். இதுபோல விஷன் 2 செயற்கைக்கோள் ஆர் பி 6 தளத்தில் இருந்து ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடப்படுகிறது. பள்ளி இறுதியாண்டிலிருந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.