புதுவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி மரக்கன்றுகளை நட்டு தேசிய பசுமை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார். அதற்குமுன் காவலர்கள் கொடுத்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவித்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அவர் சட்டப் பேரவை எதிர் வளாகத்தில் மா மரக் கன்றை நட்டு தேசிய பசுமை திட்டத்தை தொடக்கி வைத்தார். அதேபோல சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.