Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை… காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு… நாராயணசாமி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதுவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை 7,732 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, 4,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 1,596 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்ககளை மேற்கொண்டு வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வீடுகளுக்கும் தினம்தோறும் சென்று தொற்று பாதித்தவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கின் போது மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |