திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பாடி மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன் நண்பர் கௌதமுடன் திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராது திடீரென வந்த ஒரு லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த முகம்மது இப்ராகிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கௌதம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.