Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் பணிகள் தொடக்கம்…. மூடப்பட்ட “நம்ம சென்னை” செல்பி மேடை…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…..!!!!

“நம்ம சென்னை” செல்பி மேடை மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாவது கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த பாதையானது மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை சுமார் 26 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வது வழித்தடமாக அமைய இருக்கிறது. மேலும் இந்த வழித்தடம் சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதைகள் மூலம் அமைக்கப்பட உள்ளது. இதனால் கலங்கரை விளக்கம் முதல் “நம்ம சென்னை செல்பி” மேடை வரையிலும் இரும்பில் ஆன தடுப்பு வேலிகளும் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளமாக “நம்ம சென்னை செல்பி” மேடை அமைந்துள்ளது. இது தற்போது மெட்ரோ ரயில் பணிக்காக மூடப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் அங்கு செல்லாதவாறு இரும்பில் ஆன தடுப்பு வேலிகளும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்ஃபி மேடையில் செல்ஃபி எடுக்க வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது “மெட்ரோ ரயில் திட்ட பணிகள் சுமார் ஆறு வருடத்திற்கு நடைபெற உள்ளது. அதனால் இந்த திட்டப் பணிகள் அனைத்தும் முடியும் வரையிலும் “நம்ம சென்னை செல்பி” மேடை திறக்கப்படாது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |