கருப்பினத்தவரின் கொலை சம்பவத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நாய்களை ஏவி இருப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் போலீஸ் அதிகாரியால் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கலவரம் வெடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் நாய்களை ஏவி இருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம்பார்த்து இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை, அவர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டார்கள் என டிரம்ப் பாராட்டியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சல்களும், முழக்கங்களும் மட்டுமே எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என அவர் கூறியுள்ளார். மின்னபொலிஸ் மாகாணத்தில் தொடங்கிய போராட்டம் இப்பொழுது நியூயார்க், போர்ட்லேண்ட், டல்லாஸ், ஆஸ்டின், டெட்ராய்ட் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல பகுதிகளுக்கு பெரும்பாலான பகுதிகளில் பரவி வருகிறது.