Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – 5.25 லட்சம் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல்லில் பரமட்டி சாலையில் உள்ள நகர ஊரமைப்பு மேம்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனை பிரிவுக்கு அனுமதி வழங்குவதில் அதிக அளவில் லஞ்சம் வாங்க படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு ஜெயகுமார் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை தனிப்படை போலீசார் நேற்று ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அலுவலகத்தின் உதவி இயக்குனர் கண்காணிப்பாளர் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |