நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கலியுகம்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன், விக்ரம் வேதா ,ரிச்சி, கே 13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . சமீபத்தில் இவர் நடிகர் மாதவனுடன் இணைந்து நடித்த ‘மாறா’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது . இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கலியுகம்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் பிரமோத் சங்கர் இயக்குகிறார் . ஹாரர் திரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் கலியுகம் என்றால் என்ன?, கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா ?இருக்காதா ? என்பதை சுட்டிக்காட்டும் விதமாக உருவாக இருக்கிறது . மேலும் இந்த உலகம் 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எப்படி இருக்கும் ? என்பது போன்று செட் அமைக்கப்பட்டு படம் உருவாக்கப்பட இருக்கிறது .