விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பஜாரில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் உட்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதுரை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் நகர பகுதி நிர்வாகிகளான ராஜா, அய்யங்கனி, சந்தனகுமார், ரமேஷ், அந்தோணி, சூரி, ஜேசுராஜ், ராஜேஷ் உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.