Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நான் வெளியே போயிட்டு வரேன்”குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அண்ணனின் பரபரப்பு புகார்…!!

வெளியே சென்று வருவதாக கூறி சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் துரைராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய பிரியதர்ஷினி என்ற மகளும் பிரித்திவிராஜ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி தனது அண்ணனான பிரித்திவிராஜிவிடம் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

இதனையடுத்து வெளியே சென்ற பிரியதர்ஷினி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் பிரித்திவிராஜ் அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் வீட்டில் தேடிப்பார்த்தும் பிரியதர்ஷினி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷனின் அண்ணன் பிரித்திவிராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான பிரியதர்ஷினியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |