நடிகர் விவேக் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து, பேனர்,போஸ்டர் வைப்பது சினிமாவுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுக திமுக, பாமக அமமுக கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில் , “கதல் சாதுகுடு”படத்தில், எல்லா இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டும் பழக்கத்தை நான் ஏற்கனவே கண்டித்துள்ளேன். இந்த சம்பவம் மிகவும் வருத்தமாக இருக்கிறது, துரதிர்ஷ்டவசமானது. சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்
I hav already condemned our habit of sticking posters everywhere, in (kadhal sadugudu).this incident is very sad n unfortunate. My heart felt condolences to the family of Subasri . கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்
— Vivekh actor (@Actor_Vivek) September 13, 2019