மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபேட்டை தெருவில் ராம்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரத லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாரத லட்சுமி வீட்டின் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்ற போது மர்ம நபர்கள் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் அவரிடம் இருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது பற்றி பாரத லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.