Categories
உலக செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு…. நிதியுதவி வழங்கிய ஈழத்தமிழ் சிறுவர்கள்…!!!

லண்டலின் வசிக்கும்  ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம்  வழங்கியுள்ளனர் .

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தொற்றை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .மேலும் பொது மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று நிவாரண நிதி உதவி வழங்க விருப்பம் உள்ளவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு” நிதி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இதில் பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின்  நிவாரண நிதியகத்திற்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் இருந்து தப்பி சென்று லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் தங்களின் சிறுசேமிப்பு தொகையான ரூபாய் 6 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர் .மேலும் ஈழத்தமிழ் சிறுவர்கள் வழங்கிய ரூபாய் 6 லட்சத்தை திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

Categories

Tech |