வாலிபரை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே தண்ணீர்பந்தல் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சாஸ்தா கோவில் அருகில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து குரும்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்தவர் தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் உள்ள சங்கராபேரி பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பதும் அவரை மர்மநபர்கள் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை குத்திக்கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.