Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்…. வாலிபருக்கு அருவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோத காரணத்தால் வாலிபரை அருவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகர் பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் வின்சென்ட் தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆகாஷ் கையில் வைத்திருந்த அருவாளால் வின்சென்டை சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த வின்சென்டை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக வின்சென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆகாஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |