Categories
தேசிய செய்திகள்

முந்திரி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை..வியாபாரிகள் ஆதரவு..!!

முந்திரி இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதிப்பதற்கு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உலகளவில் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற முந்திரி  குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் முந்திரி இறக்குமதியை தடுத்து நிறுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை வலுக்கப்பட்டது.

இதையடுத்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஜனவரி 1ம்  தேதி முதல் தடை விதித்தது. இதற்கு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

முந்திரி இறக்குமதி தடையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கை இதனால் இந்தியா முந்திரி ஏற்றுமதியில் முதலிடம் பிடிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |