Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற தம்பதி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

முன்னாள் கடற்படை வீரர் வீட்டில் நகை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் கடற்படை வீரராக இருந்தவர். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளனர். அதன்பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் 7 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது பற்றி பக்தவச்சலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |