அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.
14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது .இதுவரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .அதன்படி லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் அடுத்த சீசனில் இருந்து இடம்பெறுகின்றன. இதனால் அடுத்த சீசனில் 10 அணிகள் இடம் பெற்று விளையாட உள்ளன. இதனிடையே அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் .
அதேசமயம் புதிய அணிகள் ஏலத்துக்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால் முன்னணி வீரர்கள் கூட அடுத்த சீசன் ஏலத்தில் இடம்பெறுகின்றன .இதனால் எந்தெந்த அணி தங்கள் அணி வீரர்களை வைக்கிறது என்ற தகவல் வெளியாகி வருகின்றன .அதன் படி 5 முறை ஐபிஎல்-யில் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் கூறும்போது,” ரோகித் சர்மா,பும்ரா இருவரையும் மும்பை இந்தியன்ஸ் அணி கண்டிப்பாக தக்கவைக்கும்.அதேபோல் வெளிநாட்டு வீரர்களில் பொல்லார்ட் தக்க வைக்கப்படுவார். அதேசமயம் இஷா,ன் கிஷன் ஹர்திக் பாண்டியா இருவரில் மும்பை அணியில் இஷான் கிஷன் தக்க வைக்க படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது .ஏனெனில் ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய ஃபார்ம் மிக மோசமாக உள்ளது .அதோடு அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இஷான் கிஷன் தக்க வைக்கப்படுவது சரியாக இருக்கும் .இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா,பொல்லார்ட்,பும்ரா மற்றும் இஷான் கிஷன் ஆகிய 4 வீரர்களை தக்க வைக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.