Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலைவாய்ப்பில் முன்னுரிமை ”பாஜக விபரீத விளையாட்டு” ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே மத்திய அரசு பணிகளுக்கு வட மாநிலத்தவர்களை நியமித்து வருகின்றது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சமீபத்தில் மதுரை கோட்ட இரயில்வே பணியாளர் பணிக்கு 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர்களும் , 10_க்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தை சார்ந்தவர்கள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இதற்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே பணியாளருக்கான தேர்வில் வடமாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.அந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10  பேர் கூட தேர்வாகவில்லை என்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்தியில் பாஜக அரசும் , இங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் அமைந்த பிறகு தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகி விட்டது.தமிழகத்தில் எடுக்கின்ற பணியில் வடமாநிலத்தவர்கள் திணிக்க படுகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. ஐ.சி.எப் ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,765 பேரில் 1, 600 பேர் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் செய்து தமிழகத்தை சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணித்து விபரீத விளையாட்டை மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது.

பிற மாநிலங்களிலிருந்து துணைவேந்தர்கள் இறக்குமதி செய்ததில் தொடங்கி இப்போது வடமாநில இளைஞர்கள் மட்டுமே தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு அலுவலகப் பணியிடங்களுக்கு நிரப்பிவிட வேண்டும் என்று கொடிய வஞ்சக எண்ணத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுவது கவலை அளிக்கிறது.தமிழ் நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு இலவு காத்த கிளி போல் காத்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் மத்திய பாஜக அரசும் மத்திய அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை எல்லாம் வடமாநிலங்களுக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பது.

இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. மதுரை ரயில்வே கோட்ட தேர்வில் ஏன் தமிழக இளைஞர்கள் அதிகம் தேர்வாகவில்லை என்ற கேள்விக்கு ரயில்வே அதிகாரி கூறியுள்ள காரணங்கள் முற்றிலும் பொருத்தமற்றவை. ஆகவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் இனிமேல் தமிழக இளைஞர்களுக்கு 90%  முன்னுரிமை அளிக்கும் வகையில் போட்டித் தேர்வின் விதிகளை மத்திய அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்.

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனம் நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கும் விதியை உருவாக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன். வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்தில் பெருகிக் கொண்டிருக்கின்ற நிலையில் மத்திய , மாநில அரசுகள் உரிய திருத்தங்களை கொண்டு வந்து தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வராவிட்டால் இளைஞர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கின்றேன் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |