அமெரிக்காவில் சுமார் 17 கோடிக்கும் அதிகமான நபர்கள் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தொற்றை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தும் பணியினை தீவிரமாக செய்து வருகிறார்கள்.
அதன்படி கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் தற்போது வரை 37 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி சுமார் 17 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் கொரோனா குறித்த முழுமையான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.