Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“விரைவில் முகாம்கள்” தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம்…. ஆட்சியரின் தகவல்….!!

தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம் தொடர்பாக முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டம் செயல்பட இருக்கிறது. அதன்படி இம்மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை இருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள், 20 முதல் 30 வயது வரை உள்ள கருத்தரிக்கும் வாய்ப்பு இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இதனையடுத்து இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் விடுபடுபவர்களுக்கு வருகின்ற 21-ஆம் தேதி அன்று சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |