மோசடி புகார் காரணமாக இலங்கையைச் சேர்ந்த அழகியின் பட்டம் பறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் கொழும்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி அன்று திருமதி ஸ்ரீலங்கா போட்டி நடந்தது. இதில் புஷ்பிகா டி சில்வா என்பவர் திருமதி ஸ்ரீலங்கா என்ற பட்டத்தை வென்றார். ஆனால் மேடையில் அவரின் கிரீடத்தை முன்னாள் வெற்றியாளரான கரோலின் ஜூலி பறித்துவிட்டார். அவர் நியாயமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டார் என்று கரோலின் புகார் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த இந்த வருடத்திற்கான திருமதி வேர்ல்டு அழகி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஷைலின் போர்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் புஷ்பிகா டி தன் இணையதள பக்கத்தில், “கடந்த மாதம் லாஸ் வேகாஸில் நடந்த திருமதி வேர்ல்ட் போட்டியில் நடுவர்கள் தேவையின்றி செல்வாக்கு செலுத்தி, தன்னை வெற்றி பெறவிடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.