Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பலரது வாழ்வாதாரம் பாதிப்பு…. தியேட்டரை திறக்க யோசிங்க…. பிரபல இயக்குனர் வேண்டுகோள்…..!!

இது திரையரங்குகளை திறப்பதற்கான நேரம் என பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,, சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி,

ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்பது உள்ளிட்ட ஒரு சில தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். இருப்பினும், திரையரங்குகளை திறப்பது குறித்து எந்த தளர்வுகளையும் முதல்வர் அறிவிக்கவில்லை.

இதுகுறித்து திரைப்படத்துறையினர் பலர் தங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாகவும், கடிதங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், திரையரங்குகளை திறப்பதை கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட் செய்துள்ளார்.

மேலும் பல மக்களின் வாழ்வாதாரம் இதில் உள்ளது எனவும் கூறியுள்ளார். எனவே செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது வார கால கட்டத்திலாவது திரையரங்குகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிக்க வேண்டுமென்பதே திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Categories

Tech |