Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மலையென குவிந்த சாக்லேட்கள்….. இத சாப்பிடாதீங்க…. சுகாதாரத்துறை அறிவிப்பால்…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

செங்கல்பட்டு அருகே குப்பைமேட்டில் திடீரென குழந்தைகள் சாப்பிடக்கூடிய சாக்லேட்டுகள் ஆயிரக்கணக்கில் குவிந்தவண்ணம் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மிகப் பழமையான பயன்படுத்தப்படாத சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதன் அருகே அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் அவ்வப்போது வந்து குப்பையை கொட்டி செல்வதால் நாளடைவில் அது குப்பை மேடாக மாறியது. இந்நிலையில் நேற்றைய தினம் பொது மக்கள் அப்பகுதியில்  குப்பை கொட்ட சென்றபோது,

அங்கே 500க்கும் மேற்பட்ட சாக்லேட்டுகள் குவிந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ந்து போன அவர்கள் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சாக்லேட்டை பரிசோதனை செய்ததில், காலாவதியான சாக்லேட் என்பது தெரியவந்தது. இதையடுத்து இதே போன்ற காலாவதியான சாக்லேட்டுகள் மொத்த வியாபாரிகள் அப்பகுதி பஜாரில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய சோதனையில் சுகாதாரத்துறை ஈடுபட்டுவருகிறது.

Categories

Tech |