மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் கடந்த 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று ராமர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமர் பலத்த காயமடைந்தார்.
இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ராமரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.