ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.
மேலும் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 94ரூபாய் 31 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் பலரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.