Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு புறப்பட்ட போது…. உரிமையாளருக்கு நடந்த துயரம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் விஷ்ணுகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் வெள்ளகோவில் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு திலகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் விஷ்ணுகுமார் இரவு வீட்டிற்கு தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.

அப்போது இவர் நத்தகாடையூர் காங்கயம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்குள்ள ஒரு பள்ளத்தினுள் கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த விஷ்ணுகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |