Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் பாதிரியாரான மோசஸ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு யோவான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மத்தளம்பாறையில் இருக்கும் கார் ஷோரூமில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் யோவான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து வட்டாலூர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது யோவானின் மோட்டார் சைக்கிள் மீது சரவணன் என்பவரது மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விட்டது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த யோவான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற யோவானின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காயமடைந்த சரவணன் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |