Categories
பல்சுவை

மனிதனாய் வாழ அன்னை தெரசாவின் அன்பு பொன்மொழிகள் ..!!

அன்னை தெரசாவை போன்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ அவரின் பொன்மொழிகள் சில.

இறக்கத்தான் பிறந்தோம் இருக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம் !

அன்பு சொற்களில் அல்ல வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது !

குற்றம் காண தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது ! 

வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் !

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல பிறர் மனதில் வாழும் வரை !

அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல் !

மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும் !

தண்டனை தர தாமதி மன்னிக்க சிறுசிந்தனை வேண்டாம் !

உனக்கு உதவியவரை மறக்காதே !

உன்னை நேசிப்பவரை வெறுக்காதே !

உன்னை நம்பியவரை ஏமாற்றாதே !

சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல் !

ஆனந்தம் ஆற்றல் மிக்கது !

புன் முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார் !

நோய்களில் மிகக் கொடிய நோய் அடுத்தவர் மீது அக்கறையற்று இருப்பதே !

Image result for annai therasa

உண்மையான அன்பு வலிக்கும் வதைக்கும் வெறுமையாக்கும் !

பிறர் நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல !

ஜெபமே நம் இல்லங்களை இணைக்கும் காரை !

தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடையாது !

தனிமையை நவீன தொழுநோய் !

அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியை கற்றுக் கொள்கிறோம் !

உதவும் கரங்கள் செபிக்கும் உதடுகளை விட மேலானவை !

எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம் !

குற்றமற்றவரை பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது !

ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது !

புன்னகையே அன்பின் ஆரம்பம் !

உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய் !

நீ வாழ பிறரை அளிப்பதே மிகப் பெரிய வறுமை !

உதவி செய் அஃது  உன்னை வருத்தும் வரை உதவி !

வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி வார்த்தையால் அல்ல !

வெற்றிக்காக ஜெபிக்காதே பற்றுறுதிக்காக ஜெபி !

உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது !

புன்னகையே அமைதியின் ஆரம்பம் !

உன் வெற்றியல்ல முயற்சியை கடவுளுக்கு தேவை !

Categories

Tech |