அன்னை தெரசாவை போன்று அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ அவரின் பொன்மொழிகள் சில.
இறக்கத்தான் பிறந்தோம் இருக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம் !
அன்பு சொற்களில் அல்ல வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது !
குற்றம் காண தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது !
வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் !
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல பிறர் மனதில் வாழும் வரை !
அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல் !
மனம் விட்டுப் பேசுங்கள் அன்பு பெருகும் !
தண்டனை தர தாமதி மன்னிக்க சிறுசிந்தனை வேண்டாம் !
உனக்கு உதவியவரை மறக்காதே !
உன்னை நேசிப்பவரை வெறுக்காதே !
உன்னை நம்பியவரை ஏமாற்றாதே !
சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல் !
ஆனந்தம் ஆற்றல் மிக்கது !
புன் முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார் !
நோய்களில் மிகக் கொடிய நோய் அடுத்தவர் மீது அக்கறையற்று இருப்பதே !
உண்மையான அன்பு வலிக்கும் வதைக்கும் வெறுமையாக்கும் !
பிறர் நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல !
ஜெபமே நம் இல்லங்களை இணைக்கும் காரை !
தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடையாது !
தனிமையை நவீன தொழுநோய் !
அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியை கற்றுக் கொள்கிறோம் !
உதவும் கரங்கள் செபிக்கும் உதடுகளை விட மேலானவை !
எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம் !
குற்றமற்றவரை பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது !
ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது !
புன்னகையே அன்பின் ஆரம்பம் !
உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய் !
நீ வாழ பிறரை அளிப்பதே மிகப் பெரிய வறுமை !
உதவி செய் அஃது உன்னை வருத்தும் வரை உதவி !
வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி வார்த்தையால் அல்ல !
வெற்றிக்காக ஜெபிக்காதே பற்றுறுதிக்காக ஜெபி !
உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது !
புன்னகையே அமைதியின் ஆரம்பம் !
உன் வெற்றியல்ல முயற்சியை கடவுளுக்கு தேவை !