மதுரை மாவட்டம் மேலவாசல் பகுதில் வசித்துவருபவர் தமிழ்செல்வி. இரண்டு குழந்தையுடன் கணவருடன் வாழந்து வந்த இவரின் வீட்டில் நேற்று தகராறு நடந்ததாக தெரிகின்றது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து போன தாய் தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்றார்.இந்த கொடூர சம்பவத்தில் குழந்தைகள் வாரணி ஜி, வர்ணிகா ஜி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் தற்கொலைக்கு முயன்ற தாய் தமிழ்செல்வி மிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரபப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.