Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6 கோடி மதிப்பு …. ஆலையை மாற்றியமைக்கும் பணி …. மாவட்ட ஆட்சியர் ஆய்வு ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நவீன அரிசி ஆலையை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன அரிசியாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அதி நவீன அரிசி ஆலைகளில்  தானியங்கி மூட்டை தைத்தல், கொதிகலன் பகுதி, அரவை பகுதி மற்றும் அவியல் பகுதி ஆகிய பணிக்கு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன்  நவீன எந்திரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதி நவீன அரிசி ஆலை பணியானது 90 % முடிவடைந்துள்ளது.

இதையடுத்து இந்த ஆலைக்கு மின் வினியோகம் மற்றும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு பணிபுரியும் பொறியாளரிடம்  ஆலை பற்றிய விவரங்களை கேட்டறிந்து விரைவாக பணிகளை  முடிக்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வுப் பணியின் போது நுகர்வோர் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், உதவி பொறியாளர் செந்தில்குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |